Friday

சங்க ஸ்வயம்சேவக சகோதரர்களே!

 


முன்னுரை


சங்க ஸ்வயம்சேவக சகோதரர்களே!

நமது அன்பிற்குரிய வீரபாகுஜி விண்ணுலகம் ஏகிவிட்டார். இன்னும் ஒரு பத்தாண்டுகள் வாழ்வதற்கான உடல்நிலையும் ஆரோக்கியமும் அவருக்கு இருந்தன. ஏனோ இறைவன், இந்த உலக நாடக மேடையிலிருந்துதிடுதிப்பென்று அவரை அழைத்துக் கொண்டுவிட்டான்

1978 முதல் 1987 வரை கிட்டத்தட்ட பத்தாண்டுகள் நானும் அவரும் சேர்ந்து ஒரே மாவட்டத்தில் (வட ஆற்காடு) சங்கப் பணி ஆற்றியிருக்கிறோம். அவரது தலைமையின் கீழ், நகர் பிரசாரக்காக, தாலுகா பிரசாரக்காக, ஜில்லா பிரசாரக்காகப் பணியாற்றிய அரும்பெரும் பாக்கியம் எனக்கு வாய்த்தது. வீரபாகு எனும் ஆலமரத்தின் கீழே சுகமான பாதுகாப்புடன் நான் வளர்ந்தேன்.  வாழைக் கன்று அன்னையின் நிழலில் வாழ்வதுபோலே வாழ வைத்தாயே என்ற கவிதை வரிகளுக்கேற்ப பல பிரசாரகர்களை அவர் உருவாக்கினார்

எனக்கு உடன்பிறவா அண்ணனாக, தோள்மேலே கைபோட்டு சிரித்து மகிழும் தோழனாக, உணர்ச்சியூட்டும் தலைவனாக, எதிர்ப்புகளை- தடைகளைச் சிதறடித்து வெற்றிக்கொடி நாட்டும் வீரனாக, சமயோசிதம் மிகுந்த  காரியவாதியாக, புத்தம் புதிய யுக்திகளை- திட்டங்களைப் புகுத்தும் புத்திளமை கொண்டவராக, திறமையான சாரீரிக் பிரமுக்காக (உடற்பயிற்சிப் பொறுப்பாளர்), சிறந்த மேடைப் பேச்சாளராக, ஊழியர்களை உருவாக்குவதில் நிபுணராக, பிரசார பீரங்கியாக, மிகப் பெரிய நிகழ்ச்சிகளை பிரம்மாண்டமாக நடத்தும் தலைமை எக்ஸிக்யூட்டிவாக, சங்கப் பிரசுரங்களை விற்கும் விற்பனை எக்ஸ்பர்ட்டாக - இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்- அவர் இருந்தார். 

சபாஷ் வீரபாகு! சபாஷ்!


ஸ்ரீ. கி.சூரியநாராயண ராவ்


சிரத்தாஞ்சலி புஷ்பம்-1 

************************** 


1978 ஆம் ஆண்டு, சேலம் வித்யாமந்திர் பள்ளியில் நான் இரண்டாம் ஆண்டு சங்க சிக்‌ஷா வர்க (ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம்) முடித்த கையோடு பிரசாரக்காக வந்தேன். அப்போதைய வேலூர் ஜில்லாவில் திருவண்ணாமலை நகர் பிரசாரக் (நகர அமைப்பாளர்) என அறிவிக்கப்பட்டேன். வீரபாகுஜி ஜில்லா பிரசாரக் (மாவட்ட அமைப்பாளர்). அந்த சமயம் டில்லியில் மொரார்ஜி தேசாய் பிரதமராக, ஜனதா கட்சி ஆட்சி நடந்து கொண்டிருந்தது. ஜனதா கட்சிக்குள் இருந்த சில சுயநல அரசியல்வாதிகள் ‘இரட்டை உறுப்பினர்’ பிரச்னையை எழுப்பினர்; ஜனதா கட்சி ஆட்சியில் அங்கம் வகித்த வாஜ்பாய், அத்வானி போன்ற (ஜனசங்க) ஸ்வயம்சேவகர்கள் ஆர்.எஸ்.எஸ். உடன் உள்ள தங்கள் தொடர்பை அறுத்துக்கொள்ள வேண்டும் என்றும், இல்லையேல் ஜனதா கட்சியை விட்டு வெளியேற வேண்டும் என்றும், இரண்டு அமைப்புகளிலும் உறுப்பினராக இருக்கக் கூடாது என்றும் கலகம் செய்தனர். சங்கத்துடனான தொடர்பை அறுத்துக் கொள்ள மாட்டோம் என்று ஸ்வயம்சேவகர்கள் உறுதியாக இருந்தனர். இதனால் ஜனதா கட்சியில் இருந்த சுயநல அரசியல்வாதிகள் மொரார்ஜி தேசாயின் ஆட்சியைக் கவிழ்த்தனர். அரசு கவிழ்ந்ததற்கு ஆர்.எஸ்.எஸ். காரணமாக்கப்பட்டது. அதனால் நாடு முழுவதும் மக்கள் மத்தியில் ஆர்.எஸ்.எஸ். பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் எழுந்தது இயற்கையே.

சங்கத்தின் கருத்துக்களை மக்களுக்கு எடுத்துச்சொல்ல 1979 ஆகஸ்ட் மாதம் முதல் ‘ஜனஜாக்ரண்’ இயக்கத்தை (மக்கள் தொடர்பு இயக்கம்) நடத்த ஆர்.எஸ்.எஸ். முடிவு செய்தது. பொதுக்கூட்டங்கள், சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள் மூலம் நாட்டு மக்கள் தொடர்பு செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை பொதுக்கூட்டத்திற்கு பிராந்த பிரசாரக் (மாநில அமைப்பாளர்) கி.சூரியநாராயண ராவ்ஜி வருவதாக தேதி கொடுத்தார். நானோ ஊருக்கு புதியவன்; நிகழ்ச்சியை எப்படி நடத்துவது என்று எனக்கு உள்ளூரக் கலக்கம். உபஷாகா முக்கிய சிக்ஷக் என்ற பொறுப்பிலிருந்து நேராக பிரசாரக் பணிக்கு வந்தவன் நான். நகர், பாக் அளவில் கூட பணி செய்து அனுபவம் இல்லை. அப்போது வீரபாகுஜி திருவண்ணாமலை வந்தார். பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செய்தார். போலீஸ் அனுமதி, சுவர் எழுத்து வாசகங்கள், துண்டுப் பிரசுர வாசகங்கள், பொதுக்கூட்டத் தலைமை, சவுண்டு சர்வீஸ் என எல்லாவற்றையும் ஒரே நாளில் முடித்துக் கொடுத்தார். வேலூருக்குச் சென்று சுவரொட்டியை அச்சடித்து ராமஜெயம் பஸ்சில் அனுப்புவதாகச் சொல்லிச் சென்றார். ஒரு தாய் குழந்தையின் கைபிடித்து நடை பழக்குவது போல, பிரசாரகர்களை அவர் வளர்த்தார். எனக்கு மேலே உள்ள அதிகாரி அவர் என்று நான் கருத – என்றும் இடம் கொடுத்ததில்லை. உடன் பிறந்த அண்ணனாகத்தான் பழகினார்.

‘மாடப்பள்ளி ஷாகா’- சங்க வரலாற்றில் ஒரு மைல்கல்!

ஆசிரியர் கே.எஸ்.பழனி


சிரத்தாஞ்சலி புஷ்பம் -2 

***************************


1979 ஜனஜாக்ரணின் போது வந்த கடிதத்தை சூரிஜி கொடுத்திருந்தார். ‘‘எங்கள் ஊருக்கு ஆர்.எஸ்.எஸ். வேண்டும்’’ என்று மூர்த்தி என்பவர் எழுதிய கடிதத்தை எடுத்துக்கொண்டு, அவரைத் தேடி திருப்பத்தூர் தாலுகாவில் உள்ள மாடப்பள்ளிக்குச் சென்றேன்.

சிறிய குடிசை வீடு; மூன்று குழந்தைகள்; தினசரி தேங்காயும் சர்க்கரையும் கலந்து பர்பி மிட்டாய் செய்து, சுற்றியுள்ள 20 கிராமங்களிலுள்ள தேநீர்க் கடை, பெட்டிக் கடைகளுக்கு விநியோகம் செய்து அதில் வரும் வருமானத்தைக் கொண்டு ஜீவனம். அவருடன் பள்ளி மாணவர்கள் பலர் தொடர்பில் இருந்தனர். குறிப்பாக ஏழை மாணவர்களுக்கு பேனா, பென்சில் போன்றவற்றை இலவசமாக வாங்கித் தருவது, பொங்கல், சுதந்திர தினம் வந்தால் மாணவர்களிடையே போட்டி நடத்தி சிறு பரிசுகள் கொடுப்பது என இளைஞர் குழாமுடன் நெருங்கிப் பழகி வந்திருக்கிறார்.

எனது வருகை குறித்து ஏற்கனவே நான் கடிதம் எழுதியிருந்ததால், மாலையில் மாணவர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். ஊரின் பஸ் நிறுத்தத்தை ஒட்டி உள்ள மைதானத்தில் ஒன்றாகச் சந்தித்தோம். அன்றே ஷாகா (சங்க கிளை) ஆரம்பிக்கப்பட்டது.

என் திட்டப்படி மாடப்பள்ளியில் மூன்று நாட்கள் தங்கி சாயம் ஷாகாவை (மாலை நேர ஷாகா) நடத்தினேன். பிறகு வாரம் ஒருநாள் வருவது என்று முடிவாகி, ஷாகா நிகழ்ச்சிநிரல் தயார் செய்து அதன்படி ஷாகாவை தினசரி நடத்திட மூர்த்திக்கு பயிற்சியும் அளித்துவிட்டு வந்தேன்.

ஒரு மாதம் கழித்து தக்ஷத வர்கா (திறமைப் பயிற்சி வகுப்பு) நடந்தது. கடைசி நாளன்று வீரபாகுஜி கலந்துகொண்டார். அன்றே ஷாகாவிற்கு த்வஜம் (காவிக்கொடி) வழங்கப்பட்டது. தினசரி ஷாகா சங்கப் பிரார்த்தனையுடன் நடந்துகொண்டிருந்தது.

மூர்த்தி சாதாரண மனிதர் என்றாலும், அவரது உள்ளத்தில் சமுதாய அக்கறையும், தேசபக்தி அக்னியும் அதிகமாக இருந்தன. தினசரி 25-க்கும் குறையாமல் சங்க்யா (ஷாகா வருவோர் எண்ணிக்கை) இருக்கும். ஊர்மக்கள் ஷாகாவை வேடிக்கை பார்ப்பார்கள். அதன் பிறகுதான் பிரச்னை ஆரம்பமானது.

எதிரிகளின் கொட்டத்தை தவிடுபொடியாக்கிய பாலர்சேனை

ஸ்ரீ. ரங்க ராமானுஜம் தம்பதி



சிரத்தாஞ்சலி புஷ்பம் – 3 

*****************************


வேலூர் – திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் உள்ள நகரம் போளூர். நகரை ஒட்டி செங்குத்தான மலைக்குன்று. மலையுச்சியில் நரசிம்மர் ஆலயம். பார்க்கவே கம்பீரமாக இருக்கும். உச்சியில் இருந்து பார்த்தால் பச்சைப் பசேலென்ற வயல்வெளிகள் போளூரைச் சூழ்ந்திருக்கும். ஊரின் மையப்பகுதியில் பெருமாள் கோயில். வெளிப்பிரகாரத்தில் முழுவதும் பாலர்களால் நிறைந்த மாலை நேர ஷாகா; சங்க்யா 20 இருக்கும். ஞாயிற்றுக் கிழமையில் 30-ஐத் தொடும். துருதுருவென இயங்கும் பாலர்குழாம்.

பஜார் வீதியில் ‘வெல்டன் மெடிக்கல் ஸ்டோர்’ உரிமையாளரும், அரசு சித்தா மருத்துவருமான டாக்டர் கண்ணன் தன் தொடர்பில் உள்ள பள்ளி மாணவர்களை எல்லாம் ஊக்கப்படுத்தி, ஷாகாவுக்கு அனுப்பி வைப்பார். அன்னாரது இல்லம் சங்க அன்பர்களுக்கு ஆதரவாக அந்நாளில் இருந்தது.

பெருமாள் கோயிலுக்கு எதிரில் இரண்டு கட்டடங்கள் தள்ளி, காஞ்சி சங்கர மடத்தின் வேத பாடசாலை இருந்தது. வேலூர் ஆடிட்டர் ஆத்மநாபன் அவர்களது குடும்பத்துக்குச் சொந்தமான கட்டடம். (ஆடிட்டர் ஆத்மநாபனுடன் வீரபாகுஜிக்கு நெருங்கிய நட்பு இருந்தது. அவருடன் நேர்ந்த ஓர் அனுபவம் பற்றி வேறொரு புஷ்பத்தில் சொல்கிறேன்). பாடசாலையில் இருந்த கனபாடிகள், ஆர்.எஸ்.எஸ். மீது மிகுந்த அபிமானமுடையவர். அந்தி சாயும் மாலைப் பொழுதில், வேத பாடசாலை வித்யார்த்திகள் அத்யயனம் செய்யும் வேத ஒலியும், பெருமாள் கோயில் ஷாகா பாலர்களின் விளையாட்டு மகிழ்வொலியும் அந்தத் தெருவையே ரம்யமாக்கும்.

நானும் வீரபாகுஜியும் போளூருக்கு வரும்போது வேத பாடசாலையில் தங்குவோம். அப்படி ஒருநாள் தங்கியிருக்கும்போது, பாடசாலையின் கனபாடிகள் “வீரபாகு சார்! சாயந்திரம் கோயிலில் ஷாகா நடத்துகிறீர்கள்; நல்லது. காலைப் பொழுதில் இந்த வித்யார்த்திகளுக்கு சூரிய நமஸ்காரம், யோகாசனம் கற்றுத் தரலாமே?’’ என்றார். 

தீபத் திருவிழாவில் வீரபாகுஜியின் ஒரு ‘கலக்கல்’ ஐடியா!


ஆர்.எஸ்.எஸ். புக் ஸ்டாலில் வைத்திருந்த 
சுவாமி விவேகானந்தர் படம்


சிரத்தாஞ்சலி புஷ்பம் – 4 

**************************** 

1979-இல் சங்கத்தின் மக்கள் தொடர்பு இயக்கம் (ஜன ஜாக்ரண்) நாடு முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம். திருவண்ணாமலையில் சூரிஜியின் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்குப் பிறகு, ஒரு மாதம் கழித்து வீரபாகுஜி திருவண்ணாமலை வந்திருந்தார். அப்போது திருவண்ணாமலையில் பிரபாத்– சாயம் என 2 ஷாகாக்கள் இருந்தன. 

அண்ணாமலையார் கோயில் மேற்கு ராஜகோபுரத்தை ஒட்டியுள்ள வெளிப்பிரகாரத்தில் பிரபாத் (அதிகாலை) ஷாகா நடந்து கொண்டிருந்தது. மாவட்ட கூட்டுறவு வங்கியில் பணிபுரியும் கணேசன்ஜி ஷாகா முக்ய சிக்ஷக். ராஜகோபுரத்தை ஒட்டி அமைந்திருக்கும் திட்டி வாசலில் சாயம் (மாலை) ஷாகா நடந்து கொண்டிருந்தது. தருணர், பாலர் என 25 சங்க்யா இருக்கும். ஷாகா முடிந்த பிறகு, நாங்கள் இருவரும் அண்ணாமலையாரை தரிசனம் செய்ய கோயிலுக்குள் சென்றோம். கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு ஆரம்ப நிலை ஏற்பாடுகள் கோயிலில் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

“ஜோதி! எப்போதும் போல வருடா வருடம் தீபத் திருவிழா வருகிறது. நாமும் மக்களோடு மக்களாக வந்து தரிசனம் செய்துவிட்டுப் போகிறோம்! பலவிதமான கேளிக்கை நிகழ்ச்சிகளும், கச்சேரிகளும் ஊரைச் சுற்றிலும் நடக்கின்றன. வியாபார நிறுவனங்கள் தங்கள் பொருள்களை ஸ்டால் போட்டு காட்சிப்படுத்தி விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் ஆர்.எஸ்.எஸ். போன்ற பெரிய ஸ்தாபனமாகிய நம் சங்கத்தைப் பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்ல நாம் எதுவும் செய்யாமல் இருக்கிறோமே! ஜன ஜாக்ரண் நடைபெறும் இந்த சமயத்திலாவது நாம் ஏதாவது செய்தாக வேண்டும்” என்றார் வீரபாகுஜி.

“நல்லது ஜி! நம் சங்கத்தைப் பற்றி நோட்டீஸ் போட்டு மக்களுக்கு விநியோகிப்போம்” என்றேன் நான்.

“ஆமாம், ஆமாம், பாதி நோட்டீஸ் - தெருவில் குப்பையாகத்தான் கிடக்கும். சிலர் படிப்பார்கள். சிலர் படிக்காமலேயே வீசியெறிந்துவிட்டுப் போய் விடுவார்கள்” என்றார் வீரபாகுஜி.

அன்று இரவு உணவு முடித்த பின்னர், காரியாலயத்தில் இதுபற்றி பேச்சு மேலும் தொடர்ந்தது.

“நாம் ஏன் ஆர்.எஸ்.எஸ். ஸ்டால் போடக் கூடாது? சங்கத்தின் பேனர் கட்டி, சங்கப் புத்தகங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் ஸ்டால் போடலாமே?” என்றார் வீரபாகுஜி.

பேர்ணாம்பட்டு இந்துக்களின் வீரகாவியம்


சேலம் ஸ்ரீ எம்.ராமசாமி


சிரத்தாஞ்சலி புஷ்பம் – 5 

****************************

1978 – 79 களில் நடைபெற்ற சம்பவம் இது. இந்துக்களுக்காக வாதாடவும் போராடவும் ‘இந்து முன்னணி’ எனும் மாபெரும் அமைப்பு உதயமாகாத காலகட்டம். ஆயினும் உள்ளூர் இந்துக்கள் ஏதாவது ஓர் அமைப்பின் பெயரில், ஒன்றுதிரண்டு தங்களுக்கு ஏற்பட்ட சவால்களைச் சமாளித்தும் முறியடித்தும் வந்தனர். அவற்றில் ஒன்றான, வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு நகரில் சாதாரண பொதுஜன இந்துக்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, ஜெயபேரிகை முழங்கிய வீரவரலாற்றை உங்கள் முன் இப்போது வைக்கிறேன்.

இந்த வெற்றிக்கதைக்கு நாயகர்கள் மூன்று பேர்:

1. சேலம் எம்.ராமசாமிஜி,

2. வீரபாகுஜி,

3. பேர்ணாம்பட்டு டி.பத்மநாபன்ஜி (குடியாத்தம், சரஸ்வதி வித்யாலயா நிறுவனர்களுள் ஒருவர்).

பேர்ணாம்பட்டு நகருக்குத் தெற்கே 2 கி.மீ. தூரத்தில் உள்ள கிராமம் ஓம்குப்பம். அவ்வூர் இந்துக்கள் 15 கி.மீ. தூரத்தில் கைலாசகிரி மலையில் உள்ள முருகப் பெருமானுக்கு காவடி செலுத்த வேண்டிக்கொள்வர். அந்தப் பிரார்த்தனையை நிறைவேற்றுவதற்கு காவடி ஊர்வலம் செல்வது பாரம்பரிய வழக்கம்.

அதன்படி, 1978 ஜூலை 25 அன்று காவடி ஏந்தி ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, ஞானவேல் முருகனுக்கு அரோகரா’ என இறைநாமம் பாடியவாறு பக்தர்கள் ஊர்வலமாகச் சென்றனர்.

பேர்ணாம்பட்டு நகரில் உள்ள ரஷீதாபாத் எனுமிடத்தில் மசூதி இருக்கும் பிரதான வீதி வழியாகச் சென்றபோது, மசூதியில் இருந்து கற்களும் செருப்புகளும் சோடா பாட்டில்களும் வீசப்பட்டன. எதிர்பாராத வகையில் நடந்த இத்தாக்குதலால் ஹிந்துக்கள் நிலைதடுமாறி விழுந்தனர். பலருக்கு பலத்த காயம்; காவடிகள் சிதறின. பாதுகாப்புக்கு உடன் வந்த காவலர்களும் தாக்கப்பட்டனர். குறிப்பாக இன்ஸ்பெக்டர் ஸ்ரீசைலம் அவர்களுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது; காவடி ஊர்வலம் தடைபட்டுப் போனது. 

குடியாத்தம் ஸ்ரீ. டி.பத்மநாபன் 
(பேர்ணாம்பட்டு)
பேர்ணாம்பட்டு – குடியாத்தம் சாலையில் பங்களாமேடு பஸ் நிறுத்தத்திலிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் உள்ளது ஏரிக்குத்தி கிராமம். அப்போது, ஏரிக்குத்தி, சாத்கர், பேர்ணாம்பட்டு ஆகிய ஊர்களில் ஷாகாக்கள் நடைபெற்று வந்தன. மேற்கண்ட காவடி ஊர்வலம் தடைபட்டுப் போன சம்பவம், ஸ்வயம்சேவகர்களின் உள்ளத்தில் பெரும் ஆதங்கத்தை ஏற்படுத்தியது. மீண்டும் இந்துக்களின் உரிமையை நிலைநாட்ட, ஏரிக்குத்தி கிராமத்திலிருந்து 25.8.1978 கிருத்திகையன்று மீண்டும் காவடி ஊர்வலம் பத்மநாபன்ஜி தலைமையில் எடுக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் பாடீகர் அந்த இடத்தில் இருந்தார். போலீஸும் இருந்தது. ஊர்வலம் சின்ன மசூதி தெரு வழியாக வந்தபோது, முஸ்லிம்கள் மீண்டும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ‘’இஃது நூறு சதவீதம் முஸ்லிம்கள் வாழும் பகுதி. இந்தத் தெரு வழியாக காவடி ஊர்வலம் செல்ல நாங்கள் அனுமதிக்க மாட்டோம்’’ என்றனர்.

‘‘இது அனைவருக்கும் பொதுவான வீதி. குறிப்பிட்ட மதத்தினர் பெரும்பான்மையாக வசிப்பதால், வீதி அவர்களுக்குச் சொந்தமாகிவிடாது. இவ்வழியே காவடி ஊர்வலம் செல்வது எங்கள் உரிமை. நீங்கள் தடுக்கமுடியாது’’ என்று இந்துக்கள் வாதாடினர். நீதி வழங்கவேண்டிய கலெக்டர், உடனே 144 தடை உத்தரவைப் பிறப்பித்து, காவடி ஊர்வலத்தினரைக் கலைந்து செல்லுமாறு வற்புறுத்தினார். ‘மாட்டோம்’ என்றனர் இந்துக்கள். போலீஸ் தடியடிப் பிரயோகம் செய்தது. பலருக்கு ரத்தக் காயங்கள். பத்மநாபன்ஜிக்கு பலத்த அடி. காவடி ஊர்வலம் நடைபெறாமல் மீண்டும் நின்றுபோனது.

பேர்ணாம்பட்டு சம்பவங்கள் பற்றி பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின. பேர்ணாம்பட்டு சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவியது.

வந்தவாசி: ஆடிக்கிருத்திகை காவடி ஊர்வலமும் சங்கப்பணியின் ‘குதிரைப் பாய்ச்சலும்’

தவளகிரி மலை, வந்தவாசி 


சிரத்தாஞ்சலி புஷ்பம் – 6 

*****************************

1981-ஆம் ஆண்டு நடந்த சம்பவம் இது.

வந்தவாசி - திருவண்ணாமலை சாலையில் உள்ள கிராமம் மாம்பட்டு. அந்தக் கிராமத்து மக்கள் ஆடிக்கிருத்திகையன்று திருத்தணிகையில் உள்ள முருகப் பெருமானுக்கு காவடி ஏந்தி, புனிதப் பயணம் செல்வர். மாம்பட்டு கிராமத்திலிருந்து நடைப்பயணமாக, வந்தவாசி பேருந்து நிலையம் வரை வந்து, திருத்தணிகைக்கு பேருந்தில் பயணிப்பர். கிராம மக்களுடன் அக்கம்பக்கத்து ஊர்களைச் சேர்ந்தவர்களும், வந்தவாசி நகரைச் சேர்ந்தவர்களும் விரதம் இருந்து, காவடி சுமந்து உடன் செல்வர்.

1981ஆம் ஆண்டு ஆடிக்கிருத்திகையின்போது, மாம்பட்டு காவடி ஊர்வலம் வந்தவாசி பஜார் வீதி வழியாகச் சென்றது. அங்கிருந்த மசூதியைக் கடந்து சென்றபோது, காவடி ஊர்வலம் மீது முஸ்லிம்கள் தாக்குதல் நடத்தினர். மசூதிக்குள்ளிலிருந்து கற்களும், செருப்புகளும், மூத்திரச் சட்டிகளும் (சிறு பானைகள்) வீசப்பட்டன. காவடி பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். காவடி ஊர்வலம் தடைப்பட்டுப் போனது.

அதுமட்டுமல்லாமல், இரண்டு நாட்கள் கழித்து, மசூதியின் முன்புள்ள சாலையில், வலது மற்றும் இடதுபக்க திசைகளில் 100 மீட்டர் இடைவெளியில் வெள்ளை நிறக் கோடுகளைப் போட்டனர் முஸ்லிம்கள். ஒரு வெள்ளைக் கோட்டிலிருந்து மற்றொரு வெள்ளைக்கோட்டைத் தொடும் தூரம் வரை மேளதாளம் வாசிக்கக் கூடாது என்றும், கோஷங்கள் போடக் கூடாது என்றும், மசூதியின் இருபுறத்திலும் கம்பங்கள் நட்டு, பெரிய அறிவிப்புப் பலகைகளில் (போர்டு) எழுதி வைத்தனர்.

அதன்பிறகு, வந்தவாசி- பஜார் வீதியில் இந்துக்களின் எந்த ஊர்வலமாக இருந்தாலும், மசூதியின் முன்பாக மேளம் கொட்டுவதை நிறுத்திவிட்டு, மெளன ஊர்வலமாகச் செல்லும் வழக்கம் ஏற்பட்டது. இந்த அவமானகரமான நிலை குறித்து, இந்துக்களின் மனதில் கொந்தளிப்பு இருந்து வந்தது இயல்புதான். இச்சந்தர்ப்பத்தில் வந்தவாசியில் இந்து முன்னணியின் கிளை அமைக்கப்பட்டது. பிரின்டிங் பிரஸ் நடத்தி வரும் ராஜாராம் அவர்கள் வந்தவாசி நகர இந்து முன்னணி தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்தக் காலகட்டத்தில், எல்.மோகன் வந்தவாசி தாலுகா பிரசாரகராக இருந்தார். கடலூர்- மஞ்சக்குப்பம் ஷாகாவைச் சேர்ந்த சீனிவாசன் ஆரணியில் பிரசாரகராக இருந்தார். பென்னாடம் ரத்னசபாபதி வேலூர் நகர் பிரசாரகராக இருந்தார். மாம்பலம் ஷாகா சு.விஸ்வநாதன், கடலூர் ஜில்லா பிரசாரகராக இருந்தார். பரமக்குடி டி.ஆர்.நாராயனன் திருக்கோவிலூரில் பிரசாரகராக இருந்தார். நான் வேலூர் ஜில்லா பிரசாரகராக இருந்தேன். செங்கத்தைச் சேர்ந்த ராஜா ஆற்காட்டிலும், தாயுமானவன் திருவள்ளூரிலும் பிரசாரகர்களாக இருந்தனர்.

மாதந்தோறும் பிரசாரக் பைட்டக் (சங்க அமைப்பாளர்கள் ஆலோசனை அமர்வு) நடக்கும். அந்த நாள் எப்போது வரும் என்று காத்திருப்போம். காரணம், பிரசாரக் பைடக்குகளை விபாக் பிரசாரக் (கோட்ட அமைப்பாளர்) வீரபாகுஜி கலகலப்பாக நடத்துவார்; உற்சாகமாக இருக்கும்; பொழுதுபோவதே தெரியாது. அவரிடம் சுற்றுப்பயணத் தேதி வாங்குவதில் பிரசாரகர்களிடையே போட்டியும் முந்துதலும் இருக்கும்.

1982-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் வேலூர் விபாகின் பிரசாரகர்கள் பைட்டக் வந்தவாசியில் நடந்தது. அதில், சென்ற ஆண்டு இதே ஆகஸ்ட் மாதம் காவடி ஊர்வலம் தாக்கப்பட்டு, தடைப்பட்டுப் போனது குறித்து சர்ச்சை நடந்தது. இதை மாற்றியாக வேண்டும் என்று தீர்மானித்தோம். இறுதியில் வீரபாகுஜி, வரும் ஆடிக்கிருத்திகை அன்று தான் வந்தவாசியில் இருப்பதாகவும், காவடி ஊர்வலத்தில் கலந்து கொள்வதாகவும், அதிக எண்ணிக்கையில் ஸ்வயம்சேவகர்கள் காவடி ஏந்தி, ஊர்வலத்தில் கலந்துகொள்ளச் செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

காவடி ஊர்வலத்தில் வீரபாகுஜி கலந்து கொள்கிறார் என்ற செய்தி, வந்தவாசி தாலுகாவில் உள்ள ஸ்வயம்சேவகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

செய்யாறு: பூஜ்ஜியத்திலிருந்து ஒரு ராஜ்ஜியம்!


ஸ்தல விருட்சம் பனைமரமும்,
திருவத்திபுரம் வேதபுரீஸ்வரர் கோயில் கோபுரங்களும்


சிரத்தாஞ்சலி புஷ்பம் – 7 

*****************************


1984-ஆம் ஆண்டு நடந்த சம்பவம் இது…

திருவண்ணாமலை சங்க கார்யாலயத்தில் ஒரு நாள் மதிய உணவு முடித்து, நானும் வீரபாகுஜியும் ஓய்வாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அந்த ஆண்டு நடைபெற வேண்டிய ஐடிசி முகாமை (பிராத்மிக் சிக்‌ஷண வர்கா- சங்க அடிப்படைப் பயிற்சி முகாம்) எந்த ஊரில், எந்த இடத்தில், எந்தத் தேதியில் நடத்துவது, எத்தனை சங்க்யா (பயிற்சியாளர்கள் எண்ணிக்கை) வரும் என்பது பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருந்தோம். பின்னர் சிறிது நேரம் உறங்கச் சென்றோம்.

மாலையில் 4 மணியளவில் வீரபாகுஜி, “ஜோதி, எனக்கு ஒரு யோசனை! இந்த செய்யாறு தாலுகாவில் சங்க வேலை ஜீரோவாக உள்ளது. உங்களாலும் அந்த தாலுகாவில் கவனம் செலுத்த முடியவில்லை. என்னாலும் நேரம் கொடுக்க முடியவில்லை. ஷாகா இல்லாத தாலுகா என்று தொடர்ந்து பட்டியலில் இருந்து கொண்டிருக்கிறது. எனவே, செய்யாறில் ஐடிசி வைத்துக் கொண்டால் எப்படி இருக்கும்?” என்றார்.

எனக்குச் சிரிப்பு வந்தது. ‘‘அங்கு ஷாகா இல்லை. பெயருக்குக் கூட ஸ்வயம்சேவகர்கள் என்று யாரும் கிடையாது. எப்படிஜி, ஐடிசி நடத்துவது?’’ என்றேன் நான்.

‘‘ஓர் ஊரில் ஷாகா நடத்தி, ஸ்வயம்சேவகர் உருவாகி, காரியகர்த்தர் தயாரான பின்னர் முகாம் நடத்துவது என்பது ஏற்கனவே உள்ள வழிமுறை. ஏன் அந்தர்பல்டியாக செய்யக் கூடாது? அந்த ஊரில் ஐடிசி நடத்துவோம். அதன்மூலம் சிலர் தொடர்புக்கு வருவார்கள். அவர்களை வைத்து ஷாகா துவக்குவோம். எப்படி?’’ என்றார் வீரபாகுஜி.

நான், ‘‘உங்கள் அந்தர்பல்டி எல்லாம் இருக்கட்டும், வியவஸ்தா (முகாம் ஏற்பாடுகள்) மற்றும் பிரபந்தகர்களுக்கு (முகாம் நடத்துவோர்) எங்கே போவது?’’ என்றேன்.

‘‘அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம். பிறகு பார்த்துக் கொள்ளலாம். ஐடிசி நடத்துவதற்கு ஒரு இடத்தை மட்டும் கண்டுபிடித்துவிட்டால் போதும். மற்ற எல்லாவற்றையும் சமாளித்துவிடலாம்’’ என்றார் வீரபாகுஜி.

‘‘செய்யாறில் நமக்குத் தெரிந்தவர் என்று ஒருவர்கூட இல்லையே?’’ என்றேன்.

‘‘தெள்ளாறைச் சேர்ந்த டி.ஜி. மணி என்பவர் செய்யாறில் தங்கி, வக்கீல் தொழில் செய்கிறார். அவரை நான் தெள்ளாறில் ஓரிரு முறை சந்தித்துப் பேசியிருக்கிறேன். அவருக்கு நான் ஒரு கடிதம் தருகிறேன். அதை எடுத்துக்கொண்டு செய்யாறு செல்லுங்கள். அவர்மூலம் ஐடிசிக்கு எப்படியாவது ஓரிடத்தைத் தேர்வு செய்து விடுங்கள். தைரியமாக நாளையே செய்யாறுக்கு புறப்பட்டுச் செல்லுங்கள்’’ என்றார் வீரபாகுஜி.

செங்கம் மண்ணில் சங்கத்தின் பகவாக் கொடி பறந்த கதை

 

1980-களில் எடுக்கப்பட்ட 
வீரபாகுஜியின் நிழற்படம்.


சிரத்தாஞ்சலி புஷ்பம் -8

 பாகம்-1 / இது இறைவனின் காரியம்!

 *****************************

1980 ஜனவரி - பிப்ரவரி மாதங்களுக்கு இடைப்பட்ட காலம் என்று நினைக்கிறேன். அப்போது செங்கம் தாலுகாவில் இறையூர் எனும் கிராமத்தில் மட்டும்தான் ஷாகா இருந்தது. (1979-ஆம் வருடம் ஜனஜாகரண்துக்ளக் இதழில் சூரிஜியின் பேட்டிசங்க ஆதரவு கடிதங்கள்அதன் மூலம் இறையூரில் ஷாகா துவங்கப்பட்டது.) தாலுகா கேந்திரமான செங்கத்தில் ஷாகா இல்லை; சங்கத் தொடர்பு ஏதும் இல்லை. 

ஒருநாள், ஷாகா சுற்றுப்பயணமாக திருவண்ணாமலைக்கு வீரபாகுஜி வந்திருந்தார். வருகின்ற பனிக்கால முகாமிற்குள் மாவட்டத்தின் ஷாகா இலக்கை அடைவது பற்றி எங்கள் இருவருக்குமிடையே பேச்சு இருந்தது. அந்த ஆண்டு, தாலுகா கேந்திரங்களில் ஷாகாக்கள் நடைபெறுவது கட்டாயம் என்பது பிராந்த அதிகாரிகளின் குறிப்பு. வீரபாகுஜிக்கு அது குறித்த கவலை இருந்ததை அவர் பேச்சு வெளிப்படுத்தியது. 

நாங்கள் இருவரும் அதுகுறித்துப் பேசிக்கொண்டே தேரடி வீதியில் உள்ள சங்க ஆதரவாளர் உபாத்தியாயா அவர்களின் உடுப்பி ஓட்டலுக்கு காபி அருந்தச் சென்றோம். வீரபாகுஜி ஒரு யோசனை சொன்னார். 

செங்கம் மண்ணில் சங்கத்தின் பகவாக் கொடி பறந்த கதை- 2

செங்கத்தில் ஷாகா துவங்கிய
பெருமாள் கோயில் வளாக மைதானம்:
செங்கத்தின் முதல் சங்கஸ்தான்.

சிரத்தாஞ்சலி புஷ்பம் -8

பாகம் – 2 /  தேவ துர்லப காரியகர்த்தர்கள் குழு

  *****************************

 செங்கம் பெருமாள் கோயில் கருவறைக்கு முன்பாக இருக்கும் அர்த்த மண்டபத்தில் சரியாக இரவு 7 மணிக்குஆர்.எஸ்.எஸ். அறிமுகக் கூட்டம்துவங்கியது. இளைஞர்கள், மாணவர்கள், சில பெரியோர்கள் என்று 60-க்கும் மேற்பட்டவர்கள் நிகழ்ச்சியில் பங்கெடுத்தனர். இந்து இளைஞர் மன்றத்தின் தலைவராகவும், செங்கம் சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத்தின் தலைவராகவும், வி.டி.எஸ்.ஆர். ரோட்வேஸ் பஸ் கம்பெனியின் தடவழி இன்ஸ்பெக்டராகவும் இருந்த தீர்த்தகிரி அவர்கள் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். டாக்டர்ஜி, குருஜி படங்கள் அலங்கரிக்கப்பட்டு, த்வஜம் ஏற்றப்பட்டது. அனைவரும் த்வஜப் பிரணாம் (கொடி வணக்கம்- அதற்கு பயிற்சி அளிக்கப்பட்டது) செய்தனர். 

இளைஞர் மன்றச் செயலாளர் டெய்லர் பழனி அவர்கள், செங்கம் நகரத்தில் ஆர்.எஸ்.எஸ். கிளை துவக்குவதற்கான அவசியம் ஏன் ஏற்பட்டது என்பது பற்றி சுருக்கமாகச் சொல்லி, செங்கம் நகர மக்கள் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை மனதார வரவேற்பதாகவும் கூறி, 5 நிமிடத்தில் தன் உரையை முடித்துக் கொண்டார். 

இந்து ராஷ்டிரம் இது… இந்து மைந்தர் நாம்எனும் சங்கப் பாடல், கூட்டுப் பாடலாகப் பாடப்பட்டது. வீரபாகுஜி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அடைமழை போன்று வீர உரை நிகழ்த்தினார்; தனது உரையில் சங்கத்தின் அனைத்துப் பரிமாணங்களையும் முன்வைத்தார். கோயிலுக்குள் நிலவிய நிசப்தமான சூழலால், நிகழ்ச்சிக்கு வந்த அனைவரும் ஒருமனதோடு அவரது உரையை உள்வாங்கிக் கொண்டிருந்தனர். 

பிறகு கேள்விபதில் நிகழ்ச்சி இருந்தது. ஆர்.எஸ்.எஸ். மேல் ஜாதி இயக்கமா? வடநாட்டு இயக்கமா? ரகசிய இயக்கமா? காந்தியைக் கொலை செய்த இயக்கமா? இதுபோன்று நிறையக் கேள்விகளைக் கேட்டனர். அனைத்திற்கும் வீரபாகுஜி தெளிவாக பதிலளித்தார். அனைவர் மனதிலும் முழுத் திருப்தி ஏற்பட்டது. அதை அவர்களின் மலர்ந்த முகங்கள் காட்டின. 

வந்திருந்தவர்கள் வீரபாகுஜியின் கரங்களைப் பற்றி பாராட்டுத் தெரிவித்தனர். இறுதியாக, ஷாகாவை உடனே துவக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தனர். கொஞ்ச நாட்களுக்கு வாரம் இரண்டு நாட்கள் (சனி, ஞாயிறு) சந்திப்பது என்றும், பிறகு தினசரி சந்திப்பாக ஆக்குவது என்றும் முடிவாகியது. 

செங்கம் மண்ணில் சங்கத்தின் பகவாக் கொடி பறந்த கதை - 3


சிரத்தாஞ்சலி புஷ்பம் -8

பாகம் – 3   

முஸ்லிம் எதிர்ப்பை நிர்மூலமாக்கிய 

வீரபாகுஜியின் சமயோசித யுக்தி

  *****************************

ரஜுபையா ஜி

1985ஆம் ஆண்டு
. அப்போது சர் காரியவாஹ் (அகில பாரத பொதுச் செயலாளர்) பொறுப்பில் இருந்த பேராசிரியர் ராஜேந்திர சிங் அவர்கள் (ரஜுபையா ஜி)  தமிழகத்தில் டிசம்பர் மாதத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவரது வருகையில் வேலூர் விபாகிற்கு இரண்டு நாட்கள் கிடைத்தன. 

டிசம்பர் 4ஆம் தேதி திருவண்ணாமலை ஜில்லாவிற்கும், டிசம்பர் 5ஆம் தேதி வேலூர் ஜில்லாவிற்கும் ஒதுக்கப்பட்டன. நிகழ்ச்சியின் வடிவம் குறித்து திருவண்ணாமலை ஜில்லா பைட்டக்கில் ஆலோசனை நடந்தது. செங்கத்தில் இதுவரை பெரிய நிகழ்ச்சி ஏதும் நடந்ததில்லை என்பதாலும், தற்போது தாலுகாவில் நல்ல ஷாகாக்கள் மலர்ந்துள்ளன என்பதாலும், தாலுகா காரியகர்த்தர்கள் குழு தயாராகி உள்ளதாலும், இந்த ஆண்டு ஜில்லா பதசஞ்சலன் (மாவட்ட அளவிலான சீருடை அணிவகுப்பு) மற்றும் பொதுவிழா நிகழ்ச்சியை செங்கத்தில் நடத்துவது என்று ஏகமனதாக முடிவாகியது.

உடனே, செங்கம் காரியகர்த்தர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டில் சுறுசுறுப்பாகினர். நகரின் முக்கிய இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் குறித்து சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டன. பெரிய பேனர்களும் வைக்கப்பட்டன. பொதுவிழாவுக்கு நகரத்தின் ஜனதா கட்சித் தலைவரும், ‘பெரியவர்’ என்று ஊர் மக்களால் மிகுந்த மரியாதையுடன் அழைக்கப்பட்டவருமான வழக்கறிஞர் குலசேகரன் அவர்கள் தலைமை தாங்க இசைவு தந்தார். நாட்டறம்பள்ளி ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைமை சுவாமிஜியான பூஜனீய குமரானந்த மகராஜ் அவர்கள் ஆசியுரை வழங்குவதற்கு ஒப்புக்கொண்டார்.

செங்கம் தாலுகா அலுவலகத்தின் பெரிய சுவர் ஒன்றில் பல வண்ண மைகளைக் கொண்டு,  “மலைப்பாம்பு போல, வாலில் தீப்பிடித்து எரியும்போது உறங்கும் வழக்கம் இனி இந்துக்களுக்கு வேண்டாம். ஜனத்தொகை குறையும்போதே விழித்துக்கொள்ளுங்கள் - சுப்பிரமணிய பாரதி” எனும் வாசகத்துடன் விழாக் குறித்த அறிவிப்பு வரையப்பட்டது. அது நகருக்குள் நுழையும் மக்கள் அனைவரின் கண்களையும் கவர்ந்த வண்ணமாக இருந்தது. மேலும் நகரின் பல இடங்களில் அரவிந்தர், விவேகானந்தர், சகோதரி நிவேதிதை, வீர சாவர்க்கர் ஆகியோரின் பொன்மொழிகளுடன் கூடிய விளம்பரங்கள் எழுதப்பட்டன.

விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக வீரபாகுஜி, செங்கம் வந்து இரண்டு நாட்கள் தங்கினார். பெங்களூரு சாலையில் உள்ள தோக்கவாடி, திரெளபதி அம்மன் கோயிலிலிருந்து ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் புறப்பட்டு, பஸ் நிலையம், நீதிமன்றம், தாலுகா அலுவலகம், சிவன் கோயில், பெரிய மசூதி போன்ற முக்கிய இடங்களை எத்தனை மணிக்கு எத்தனை நிமிடத்தில் ஊர்வலம் கடக்கும் என்பதைத் தீர்மானித்து நிகழ்ச்சி அழைப்பிதழில் அச்சிட வேண்டும் என்றும், ‘காலம் தவறாமை’யைக் கடைப்பிடிப்பதில் சங்கம் எவ்வளவு உறுதியாக உள்ளது என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்த இது ஒரு வாய்ப்பு என்றும் வீரபாகுஜி கூறினார்.